Thursday, 9 August 2018

பாவ மன்னிப்பு

என்னதான்
முயன்றாலும்
மற்றவரின் கரையை
கை காட்டியும்,
கைகொட்டியும்
சிரிக்கும்
மனம்..
தன் மலத்தை
மட்டும்
ஏனோ
யாருமறியாமல்
மறைக்கவே
முயல்கிறது..

எப்போதும் அது
கரையை
ஒழிப்பதை விடுத்து,
கரையை மறைக்கவே
மெனக்கெடல்
கொள்கிறது..

குற்றத்தை
ஒப்பிட்டு
மன்னிப்பு கோரச்
சொன்னால்
அது
பள்ளி செல்லும்
குழந்தை போல
அடம் கொண்டு
தப்பிக்கத்தான்
முயல்கிறது..

பாவத்தை ஒப்பிட
நடுங்கும்
இதே மனம்,
பாவம் புரிகையில்
மட்டும்
ஏனோ
திமிரெடுத்த
நாயைப் போல
சர்வ அதிகாரமும
பெற்றதாய்
பீற்றிக்
கொள்கிறது..

ஒப்பிட்டு
மன்னிப்புக்
கோருதலென்பது
இச்சென்மத்தில்
நிகழவே
நிகழாத
காரியமா?..

ஒருவேளை
பாவமன்னிப்பு
கோருதல் தான்
இச்சென்மத்தின்
ஆகப் பெரும்
கடிதான
காரியமோ?..

No comments:

Post a Comment