வண்ணங்களேயன்றி
வெறும் வெள்ளையும்
கருப்புமாய்
நெய்து கொண்டிருந்த
என் கட்டுத்தறி
உனைக் கண்டவுடன்
மட்டும் ஏனோ
ஜொலிக்கின்ற
பட்டாய் நெய்து
தள்ளுகிறது..
உன் ஜொலிப்பின்
பாதியையேனும்
அடைந்து விடுகின்ற
முனைப்பில்
அது
தங்க ஜரிகையையும்
தேவலோக
வண்ணத்தையும்
ஒருசேரக் கலந்து
இரவு பகலாய்
நெய்கிறது..
இருப்பினும்
பிரம்மன் நெய்த
பிரம்மாண்ட
ஜொலிப்பான
உனை
அடைய
இன்னும்
பலநூறு ஜென்ம
தவம் தேவை
எனப் புரியாமல்
பிரஞ்ஞையற்று
ஏனோ
பேதையாய்
நெய்கிறது
அப்பாவிக்
கட்டுத்தறி .. !!
No comments:
Post a Comment