Wednesday, 24 October 2018

நாளையின் புதிர்

நேற்றின்
இதுவரையின்
பிம்பம்
நாளையின்
மொத்தத்தையும்
எப்போதும்
புதிர் கொண்டதாகவே
வைத்து
அழகாக்குகிறது..

நேற்றின்
தழும்பும் வடுவும்
நாளையை
தளர்த்தியும்
நேற்றின்
கேளிக்கையும்
சிரிப்பும்
நாளையை
களிப்பாக்கியும்
நித்தமும்
நினைப்பாய்
அலைக்களிக்கிறது..

நானில்லா
நானாகும்
நாள் வரை
தினம் ஓர்
வண்ணம்
காட்டும்
இப்பயணம்
விடாது
பீடிக்கும் ஓர்
அனுபவம்.

-சந்திரன்

Monday, 22 October 2018

திருமண நாள்..

படித்துச் சலித்தேன்
எழுதித் திழைத்தேன்
ரசித்துக் கழித்தேன்
அலைந்து திரிந்தேன்

நீ இல்லா வெறுமையைக்
கொல்ல..

ஏதேதோ செய்தேன் நான்..

உன் வெறும் இருப்பே
இவை யாவும்
விடவும் மேலாய்
அர்த்தம் காட்டியது..

நீ இல்லா நான்
எனும் கணம்
ஏனோ
நான் இல்லா
நானாய்
சூனியமாக்கியது..

தாயின் வெறும்
இருப்பிற்காய்
ஏங்கும்
குழந்தை
போல்
வெறும்
உன் இருப்பே
எனை ஏனோ
எது குறித்தும்
சிந்திக்க
விடாமல்
அழகாய்
நிரப்பியது..

நீ என் பாதி
என இதுநாள்
காணும்
உரைத்துத்
திளைத்தவனுக்கு,
நீ என் ஆதி
எனும் தெளிவு
எங்கோ
தட்டியது..

வாழ்நாள்
முழுதும்
ஆர்ப்பரிக்கும்
காதலோடு

திருமண நாள் வாழ்த்துக்கள்..