Sunday, 9 September 2018

புத்தனாகும் எத்தனம்

வெண்ணிற பட்டுடுத்தும்
புத்தனாய்
பிறக்க தினமும்
எத்தனித்தாலும்

நிஜம் என்னவோ..

ஆணவம்
மிதக்கும்
அற்பனாகவோ

இல்லை

கோபம்
கொப்பளிக்கும்
அரக்கனாகவோ

இல்லை

பொய்கள்
பிதற்றும்
பித்தனாகவோ

இல்லை

குரூரம்
கொள்ளும்
சிறுநரியாகவோ

இல்லை

காமம்
கொப்பளிக்கும்
அரவமாகவோதான்

பெரும்பாலும் முடிகிறது..

பிரகஸ்பதி எனும்
கனவு
இச்சென்மம்
கூடியும்
எட்டாக்கனி தான்
போலும்..

-சந்திரன்

Sunday, 2 September 2018

மனம் எனும் கட்டுத்தறி

வண்ணங்களேயன்றி
வெறும் வெள்ளையும்
கருப்புமாய்
நெய்து கொண்டிருந்த
என் கட்டுத்தறி
உனைக் கண்டவுடன்
மட்டும் ஏனோ
ஜொலிக்கின்ற
பட்டாய் நெய்து
தள்ளுகிறது..

உன் ஜொலிப்பின்
பாதியையேனும்
அடைந்து விடுகின்ற
முனைப்பில்
அது
தங்க ஜரிகையையும்
தேவலோக
வண்ணத்தையும்
ஒருசேரக் கலந்து
இரவு பகலாய்
நெய்கிறது..

இருப்பினும்
பிரம்மன் நெய்த
பிரம்மாண்ட
ஜொலிப்பான
உனை
அடைய
இன்னும்
பலநூறு ஜென்ம
தவம் தேவை
எனப் புரியாமல்
பிரஞ்ஞையற்று
ஏனோ
பேதையாய்
நெய்கிறது
அப்பாவிக்
கட்டுத்தறி .. !!