வெண்ணிற பட்டுடுத்தும்
புத்தனாய்
பிறக்க தினமும்
எத்தனித்தாலும்
நிஜம் என்னவோ..
ஆணவம்
மிதக்கும்
அற்பனாகவோ
இல்லை
கோபம்
கொப்பளிக்கும்
அரக்கனாகவோ
இல்லை
பொய்கள்
பிதற்றும்
பித்தனாகவோ
இல்லை
குரூரம்
கொள்ளும்
சிறுநரியாகவோ
இல்லை
காமம்
கொப்பளிக்கும்
அரவமாகவோதான்
பெரும்பாலும் முடிகிறது..
பிரகஸ்பதி எனும்
கனவு
இச்சென்மம்
கூடியும்
எட்டாக்கனி தான்
போலும்..
-சந்திரன்
No comments:
Post a Comment