நேற்றின்
இதுவரையின்
பிம்பம்
நாளையின்
மொத்தத்தையும்
எப்போதும்
புதிர் கொண்டதாகவே
வைத்து
அழகாக்குகிறது..
நேற்றின்
தழும்பும் வடுவும்
நாளையை
தளர்த்தியும்
நேற்றின்
கேளிக்கையும்
சிரிப்பும்
நாளையை
களிப்பாக்கியும்
நித்தமும்
நினைப்பாய்
அலைக்களிக்கிறது..
நானில்லா
நானாகும்
நாள் வரை
தினம் ஓர்
வண்ணம்
காட்டும்
இப்பயணம்
விடாது
பீடிக்கும் ஓர்
அனுபவம்.
-சந்திரன்
No comments:
Post a Comment