படித்துச் சலித்தேன்
எழுதித் திழைத்தேன்
ரசித்துக் கழித்தேன்
அலைந்து திரிந்தேன்
நீ இல்லா வெறுமையைக்
கொல்ல..
ஏதேதோ செய்தேன் நான்..
உன் வெறும் இருப்பே
இவை யாவும்
விடவும் மேலாய்
அர்த்தம் காட்டியது..
நீ இல்லா நான்
எனும் கணம்
ஏனோ
நான் இல்லா
நானாய்
சூனியமாக்கியது..
தாயின் வெறும்
இருப்பிற்காய்
ஏங்கும்
குழந்தை
போல்
வெறும்
உன் இருப்பே
எனை ஏனோ
எது குறித்தும்
சிந்திக்க
விடாமல்
அழகாய்
நிரப்பியது..
நீ என் பாதி
என இதுநாள்
காணும்
உரைத்துத்
திளைத்தவனுக்கு,
நீ என் ஆதி
எனும் தெளிவு
எங்கோ
தட்டியது..
வாழ்நாள்
முழுதும்
ஆர்ப்பரிக்கும்
காதலோடு
திருமண நாள் வாழ்த்துக்கள்..
No comments:
Post a Comment