உன்னை நான் பின்தொடர
உன் மீதான ஈர்ப்பே காரணம் ..
அதுவே ஆதிச்சுழி ..
அச்சுழி இல்லாமல் போனால்
உனை என்மனம்
எப்போதோ தொலைத்திருக்கும் ..
இப்போதும்
உனைக்காணும் கணம் யாவும்
அச்சுழி பெரும் இரைச்சலோடு
என்னுள் ஆர்ப்பரிக்கும்..
உனை காணும்
கணம் மட்டுமே
என்னுள் வரும்
ஒலி அது ..
நீ இல்லாமல் போனால்
நிச்சயம் என்னால்
அப்பேரிரைச்சலை
திரும்ப உருவாக்க முடியாது ..
காரணம்
அவ்விரைச்சலின்
ஆதி ஊற்று நீ ..
அதை
வேடிக்கை பார்க்கும்
வெறும் பார்வையாளனே நான் ..
- சந்திரன்.
No comments:
Post a Comment