இன்று தான் கண்டேன்..
விண்மீன்கள் எல்லாம்
ஏனோ இயல்பை விடவும்
அழகழகாய் மின்னுகின்றன.
சந்திரனும் கூட
இயல்பை விட்டு
இன்று
ஏனோ
பலபலப்பாய்
ஜொலிக்கின்றது.
பூக்களும்கூட
பெரும் வாசத்துடன்
இன்று
குதூகலித்து
சிரிக்கின்றன.
ஏன் என
கேட்கையில் தான்
கூறின.
இன்றுதான்
தேவதை பிறந்தாளாம்
அவளின்
பிறந்தநாளன்று
அவளின்
அழகுடன்
ஈடுசெய்யத்தான்
இத்துணை அழகாய்
ஜொலிக்கின்றனவாம்..
No comments:
Post a Comment