இன்று தான் கண்டேன்
விண்மீன்கள் எல்லாம்
ஏனோ இயல்பை விட்டு
அழகழகாய் மின்னுகின்றன.
சந்திரனும் கூட
இயல்பை விட்டு
இன்று
பலப்பப்பை
ஜொலிக்கின்றது.
பூக்கள்கூட
இயல்பை விட்டு
இன்று
குதூகலித்து
சிரிக்கின்றன.
ஏன் என
கேட்கையில் தான்
கூறின.
இன்று தான்
தேவதை பிறந்தாளாம்.
No comments:
Post a Comment