Sunday, 15 July 2018

நிழலும் நிஜமும்

எக்கணமாகினும்

கண்முன் தோன்றும்
அழகை விடவும்
காணும் முன் அது கட்டும்
பிம்பம் தான்
அலாதிப் பேரழகு..

அசலும் பிம்பமும்
அருகிலிருக்கையில்
அசலை விடவும்
ஆயிரம் மடங்கு
வசீகரிம் கொண்டது
அதன் நிழல்..

கரும் இருட்டு
உறுத்தும் பயத்தை
விடவும் அதன்
நினைப்பும் நிழலும்
தரும் பயம் தான்
என்னவோ
பலகோடி மடங்காய்த்
தெரிகிறது..

காமத்தை விடவும்
கோடி மடங்கு
வீரியம் கொண்டது
அதைப்பற்றின
சிந்தனை எனும்
நிழல்..

அங்ஙணம்
மனம் முழுமையும்
பசையாய்ப் பரவிய
காம நிழலின்
மொத்த வெளிப்பாடுதான்
வெண்ணிற
சிறு துளி நிஜம்..

ஆக நிஜமான
நிஜத்தை விடவும்
நிஜமற்ற
நிழல்தான்
பூதாகரமானது
என்ற உண்மை
விளங்கினாலும்

மனம் என்னவோ
விடாப்பிடியாய்
நிழலைப் பற்றி
சிந்திக்கவே
நித்தமும் அலைகிறது.. :(

No comments:

Post a Comment