அழகின் அரக்கி நீ ..
அடங்கா ஆணவத்தின்
பேரழகு நீ..
கணப்பொழுதில் உயிர் பிரிக்கும்
ராஜ அரவம் நீ..
கொல்லும் தணலின் கொப்பளிக்கும்
வசீகரம் நீ..
யட்சியின் மகள் நீ..
சுடும் உஷ்ணத்தின் உத்தமம் நீ..
அடர் சூட்டில் தோகை விரிக்கும்
அன்னம் நீ..
கண்களால் கணை எய்யும்
குந்தவை நீ..
நெஞ்சைக் கோடிட்டுக் கிழிக்கும்
தெய்வ ராட்சசி நீ..
நீ ..நீ..
நித்தமும் ஆர்ப்பரிக்கும்
நீங்கிடா
வசியம் நீ..
No comments:
Post a Comment