Sunday, 15 July 2018

குதிரை உந்தும் மனம்

ஓராயிரம் குதிரை உந்தும்
உடல்
எப்போதெத் திசை செல்லும்
என்பது யாருமறியா
அதிசயம்..

மனம் என்னும் பாகன்
மதிமயங்கும் கணமெங்கும்
தறிகெட்டுத் தரைதட்டி
நிற்கும் இப்
பயணம்..

சிற்சில சோகங்களும்
அற்பச்சிறு எண்ணங்களுமே
போதும்,
வலிமை வாய்ந்த
இக் குதிரைகளை
மழுங்கடித்துகச்
சிதறடிக்க..

சில சமயங்களில்
தெறிகெட்டோடும்
குதிரைகளை வெல்லும்
மனமென்னும் பாகனும் ,

பல சமயங்களில்
பாகனை தலைகீழ்
குப்புறத் தள்ளும்
வெறி கொண்ட குதிரைகளுமாய்
நீண்ட நெடியது
இப்பயணம்..

இவ்விருவரும் சிலாகித்து
ஒத்திசையும்
பேரதிசயம்
அவ்வப்போது நிகழும்
அனுபவம்..

எப்படி இருப்பினும்
கனல் குறையா,
தணலும்
தாகமும் தணியாத
குதிரை வாய்த்தலென்பது
ஓர் வரம்..

-சந்திரன்

No comments:

Post a Comment