பணம்..
இது வெகு சாதாரணமாய்க்
கடந்து போகும்
சொல் அல்ல..
அற்பச் சாதாரணமாய்
உதாசீனப்படுத்தும்
வார்தையுமல்ல.
ஒருவனைக்
குரூரமாய்க் கொல்லாமல்,
இரத்தம் பீரிடும் சிதிலாய்
சிதைக்காமல்..
கொல்லும்,
சிதைக்கும்
பேராயுதம்..
இது இடும் சூத்திரத்தில்
மொத்தச் சூன்யமும்
உன் முன் நிற்கும்..
பரிகாசங்களும்
வசை வார்த்தைகளும்
உனை
விரட்டாமல் விரட்டும்,
இலகுவாய்ப்
பைத்தியமாக்கும்..
இருட்டறைந்த
அந்நிலையிலும்
ஓர் சிறு துளியாய்
யாரேனும் தரும்
கரிசணம்,
அது
சாகும் வரையிலும்
மறவாமல் நிற்கும்
தரிசனம்..
இலகுவான
ஈவிரக்கமற்ற
இக்காகிதம்
மனிதன்
கண்ட மிருகங்களில்
மிகக்
கொடூரமானது..
இன்று
நாவால் நக்கி
கொஞ்சி மகிழும்
நாயெனத்
தெரிந்தாலும்
இந்த மிருகத்தின்
மீதுள்ள குரூரமும்
அதன் மேல் கொண்ட
பயமும்
என்றும்
மாறாதது.
- சந்திரன்
No comments:
Post a Comment