அனேக சமயங்களில்
எல்லோரும் சொல்லும்
தொடுதிரை
எனக்கெனவோ
தொடவிடா சிறையாகவே
தெரியும்..
ஒவ்வொரு முறையும்
சிகப்பு பொத்தானை
அழுத்தி பேச்சை முடிக்கும் முன்
அவள் தரும்
கடைசி முத்தம் எனக்கென்னவோ
என் சிதிலை சிதைக்காமல்
ரத்தம் பீரிட வைக்கும்..
காதலியை அடையத்
துடிக்க அலையும்
வலியை விடவும்
ரண மோசமானது
தன் மகளை தொடவொணா
அடையும் வலி..
No comments:
Post a Comment