சட்டென பூத்த
பூ இல்லை தான்
நீ எனக்கு..
உன் வரவு
வெறும் மொட்டெனத்
தெரிந்தாலும் ,
மொட்டொன்று
பூவாகும் காலம் தான்
எத்தனை அழகு..
பல ஆயிரம்
அதிசயம் தரும்
வாழ்க்கையின்
அழகிற்கு எல்லாம்
உன் வரவு நிச்சயம்
ஒரு வைரக்கிரீடம் தான்..
சட்டென வெடித்தெளும்
எனக்கு
சற்றும் பொறுமையில்லாத
நீதான் என்னவோ
நின்று நிதானமாய் மாற்ற
தினம் தினம்
எத்தனிக்கிறாய்..
ஆயிரம் முறை
சண்டையிட்டாலும்,
அடுத்த நொடியே
எனை
அமைதியாக்கும்
அழகான
வஜ்ராயுதம் தான்
நீ எனக்கு..
நெருப்பு தான்
நானென்றாலும்
தங்கமாய்
அதில் உருகும்
வடிவான
சொக்கத் தங்கம் தான்
நீ எனக்கு...
என்றேனும்
ஒரு நாள்
நானும் புத்தனாவேன்..
அவ்வாாறெனை புத்தனாக்கும் அரிதான மந்திரச்சாவியும் நீ தான் நீ எனக்கு..
எழுத எழுத
ஆயிரம் இருந்தும்
எதனுள்ளும் புகாது
என்னை முழுதாய் நிரப்பிய
என் மனையாளுக்கு
இனிய பிறந்த நாள்
வாழ்த்துக்கள்..
No comments:
Post a Comment