அவதாரப்புருசர்கள்
அற்பாயுள் கொண்டவரா
நீ சொல் நண்பா ..
அவதாரப்புருசர்கள்
அற்பாயுள் கொண்டவரா.
வரம் வாங்கி வந்ததாய்
நான் உணரும் வெகு சிலரும்,
வெகு வேகமாய் பிரிவதேனோ
நீ சொல் நண்பா ..
வெகு வேகமாய் பிரிவது தான் ஏனோ..
வழக்கத்திற்கொன்றான
துக்க நாள் இல்லை தான் நண்பா..
இது வழக்கத்திற்கொன்றான
துக்க நாள் இல்லை தான்..
திரும்பி வரா
தியானத்தில் நீ இருக்க,
கள்ளமில்லா சிரிப்போடு
ஓடும் உன் மகளிடம்
என் சொல்வாள் நண்பா..
உன் துணை
என் தான் செல்வாள்..
நன்கு யோசிக்கையில், வழக்கத்திற்கொன்றான
நண்பனும் நீ இல்லை தான்..
முதல் அடியிலேயே நாங்கள்
முழித்துக் களைத்திருக்க ..
சிரித்த படியே சரசரவென
ஏறிச் சென்றாய் நீ..
நீ செய்த சாகசம்
பார்த்தே
நானும் சாகசம்
செய்யத் துடித்தேன்..
அவிழ்க்காத புதிர் எதையும்
அனாசமாய்
அவிழ்த்து சிரித்தாய் நீ..
அதைக்கண்டு தான்
காலன் பயந்தானோ என்னவோ..
உனை வெல்ல வேறு வழி தெரியாமல், கோழையாய் உனைக் கொன்றொழித்தான்.
ஆயிரம் புதிர் போடும் வாழ்க்கை, எனைக்கேட்டால் உன்னிடம் சற்று பொறுத்திருக்கலாம் தான்..
அதனால் தான் கேட்டேன்..
அவதாரப்புருசர்கள் அற்பாயுள் கொண்டவரா சொல் நண்பா ..
அவதாரப்புருசர்கள் அற்பாயுள் கொண்டவரா.
No comments:
Post a Comment