நான் மாற்றோனோடு
ஒத்திசையும்
மனம் வாய்த்தவனல்ல..
வெகுவெகு
சொற்பமே
நான்
சேர்த்த
நண்பர் கூட்டம்..
நான் சேர்ந்த
கானல் கூட்டமும்
இக்கால வாழ்க்கையின்
தேவையாய்ச்
சொல்லும்
நட்பிற்காய்ச்
சேர்த்தது..
ஓர் சிறு பொறி
ஓர் சிறு உறசலே
போதும்
நான் சேர்ந்த மொத்தக்
கூட்டத்தையும்
நானே தீயிட்டழிக்க..
எப்போது
எம்மனநிலையில்
நான்
எனும் கேள்வியே
இன்னும்
எனக்கு
விடையறியாப் புதிர்..
இப்புதிருக்கு
என்னை விட
மேலாய்
விடை தெரிந்ததாய்
நானறிந்த
ஒரே ஜீவன்
நீ..
இப்பைத்தியத்திற்கான
வைத்தியம் தெரிந்த
கை தேர்ந்த
மருத்துவத்தியும்
நீ ஒருத்தி தான்..
No comments:
Post a Comment